கல்முனை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்.


எம்.என்.எம்.அப்ராஸ்-

ல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் முக்கியஸ்தர்களும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும் இடையில் கல்முனை நகரின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் நிகழ்வு
(15) பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இவ் விஷேட கலந்துரையாடல் நிகழ்வில்

01. கல்முனையின் எதிர்கால கல்வி அபிவிருத்தி செயர்த்திட்டங்கள்
02. பாடசாலைகளின் வெற்றிடமாக உள்ள எதிர்கால அதிபர் நியமனம்
03. போக்குவரத்து சபையின் மருத்துவ சான்றிதழ் வழங்கும் காரியாலயத்தை கல்முனை நகரில் நிறுவுதல்
04. கரையோர பாதுகாப்பு செயல் திட்டம்
05. கரையோர சுனாமி இடிபாடுகளை அகற்றுதல் செயற்திட்டம்
06. மீனவர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய வாடிகள் மற்றும் மீன் சந்தை நிறுவுதல்
07.கல்முனை மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள வைத்திய அதிகாரி நியமனம்

போன்ற மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு பல தீர்க்கமான முடிவுகளும் பிரதி அமைச்சர் கௌரவ. எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் எடுக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோஷான் அக்தார் மற்றும் ,எம்.எஸ்.எம். சத்தார் மற்றும் அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்கள் பலரும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக உபதலைவர் எஸ்.அப்துல் சமத், செயாளர் எஸ்.எல்.எம் இப்ராஹிம் ஆகியோருடன் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -