இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
புதிய கலப்பு தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்கு பாரியபாதிப்பு ஏற்படும் அபாயம் அனைத்து தரப்பினாலும் அன்றுசுட்டிக்காட்டப்பட்டது.புதிய தேர்தல் முறைக்கு எதிராக மஹிந்தராஜபக்ஷ அணியே அன்று பாராளுமன்றத்தில்வாக்களித்திருந்தது.
புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்கள்பாதிப்படைவார்கள் என்பதை அன்றே நாம்சுட்டிக்காட்டினோம்.ஆனால் அன்று அதற்கு ஆதரவாகவாக்களித்த சிறுபான்மை கட்சி தலைவர்கள் இன்று ஒப்பாரிவைக்கின்றனர்.இன்று பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும்பெரும் சக்தியாக விளங்கும் மஹிந்த அணியின் உதவியைகொண்டே மிக இலகுவாக மீண்டும் பழைய முறையில் தேர்தலைநடத்த செய்ய முடியும்.
எனவே சிறுபான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய அநீதியை நிவர்த்தி செய்ய உதவக்கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும்தினங்களில் நடத்தவுள்ளதாக பொதுஜன பெரமுன முஸ்லிம்முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார்குறிப்பிட்டார்.
