பஸ்தரிப்பு நிலையம் தொடக்கம் பொலிவேரியன் வரையிலான குளக்கரை வீதி காபட் வீதியாக புனரமைப்பு.

அகமட் எஸ். முகைடீன்-
ரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் கல்முனை பஸ்தரிப்பு நிலையயம் தொடக்கம் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் ஊடாக சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத்திட்டம் வரையிலான குளக்கரை வீதி காபட் வீதியாக அமைக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பொறியியலாளர் எம். பாரி, மாவட்ட பொறியியலாளர் எம். அலியார், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சத்தார், நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், கல்முனைத் தொகுதி வீதி அபிவிருத்தி பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பொறியியலாளர்கள், கல்முனைப் பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (22) வெள்ளிக்கிழமை நேரில் சென்று குறித்த வீதியினை பார்வையிட்டனர்.

இவ்வீதியானது உலக வங்கியின் நிதி உதவியில் காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -