சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான கலந்துறையாடல்


அப்துல்சலாம் யாசீம்-

சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (02) மட்ட்டக்களப்பில் நடை பெற்றது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு,பாசிக்குடா,
கல்குடாவைச்சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது வன விலங்குகள் குறிப்பாக முதலைகளால் உள்ளாசப்பிரயாணிகளுக்கு ஏற்பபட்டுள்ள அச்சுறுத்தல்,ஹோட்டல் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்குதல்,கிழக்கு மாகாண உல்லாச பிரயாணம் தொடர்பான உட்கட்டமைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கருத்து தெரிவிக்கையில் உயர் தரமான உல்லாசப்பிரயாணத்துறை கட்டுமானங்களை உருவாக்குதல் தொடர்பாக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பிரதான தொழிற்துறையாக உல்லாச பிரயாணத்துறையை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண சபை உரிய நடவடிக்கையினை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன,கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் சாலித்த விஐயசுந்தர என பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -