எம்.ஜே.எம்.சஜீத்-
தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அட்டாளைச்சேனை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும், தேர்தல் பிரச்சாரக்கூட்டமும் நேற்று (7) அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மக்கீன் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இக்கூட்டத்தின் போது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக தேசிய காங்கிரசின் குதிரைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதன்போது பெருந்திரலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -