தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பயணித்த வேன் விபத்து


க.கிஷாந்தன்-

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை பகுதியில் 12.01.2018 அன்று இரவு 7 மணியளவில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் யானை சின்னத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பயணித்த வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

அட்டன் - நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் அட்டன் பகுதியிலிருந்து லிந்துலை பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்றும் பத்தனையிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேனும் பத்தனை பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், மழை பெய்ததன் காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -