தூய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு கருத்தரங்கு




எம்.ஜே.எம்.சஜீத்-

புதிய அரசியலமைப்பு மாற்றமும் - மக்களின் எதிர்பார்ப்பையும் ஊடக மயப்படுத்துவதின் மூலம் தூய அரசியலுக்கான பங்களிப்பை வழங்குதல் எனும் எண்ணகக்ருவிற்கமைவாக ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு இன்று (23) அக்கரைப்பற்று இணைய மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தவிசாளர் திரு.வ.பரமசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் வளவாளராகக் கலந்துகொண்டார்.

இதன்போது உளளுராட்சி மன்ற திருத்தச்சட்டமூலம் பற்றிய விளக்கம், வட்டாரத் தேர்தலின் நன்மை, தீமை மற்றும் அவசியம் தொடர்பான விளக்கம், அரசியலில் பெண்களின் வகிபங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய விளக்கம், உளளுராட்சி கட்டமைப்பு பற்றிய தெளிவுறுத்தல் என்பன வளவாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் பெண் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -