காத்தான்குடி நகர சபைக்கான சு.காவின் வேட்புமனு ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல்



காத்தான்குடி நகர சபைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் காத்தான்குடி நகர சபையை வெற்றிகொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

சிறந்த வேட்பாளர்களை தொகுதிகளில் களமிறக்கியுள்ளோம். மக்களின் கருத்துக்களுக்கு அமையவே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தேர்தலை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றோம் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -