எம்.ஜே.எம். சஜீத்-
அட்டாளைச்சேனை நடுவர் சங்கத்தின் மாதாந்த கூட்டமும், விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் இன்று (23) தைக்காநகர் பிரதேசத்தில் ஆர்.ஹாறூன் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.
நடுவர் சங்கத்தின் தலைவரும், அம்பாரை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளருமான எஸ்.எல்.தாஜூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னளாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது கிழக்கு மாகாண முன்னளாள் அமைச்சர் உதுமாலெப்பையின் 2017ஆம் ஆண்டுக்கான மாகாண சபை நிதியொதுக்கீட்டின் ஊடாக அட்டாளைச்சேனை நடுவர் சங்கத்திற்கு ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை நடுவர் சங்கத்தின் உறுப்பினரும், ஆசிரியருமான ஏ.எல்.அஜ்மல் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.