திருகோணமலை.ரொட்டவெவ கிராம விவசாயிகளின் விவசாய நிலங்களான சின்ன புளியம்குளம்.பெரிய புளியங்குளம் போன்ற விவசாயக்காணிகளை
தேர்தலுக்கு முன்னர் விடுவித்து தருமாறு மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ் எம் பைசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கையினை அதிமேதகு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- கடந்த யுத்த காலத்திற்கு முன்னர் ரொட்டவெவ விவசாயிகள் புளியங்குளம் பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த அரசாங்கத்தினால் கமநெகும.மகநெகும திட்டங்களின் ஊடாக விவசாயிகளின் விவசாயத்தினை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு குளங்கள் புணரமைப்பு செய்யப்பட்டதாகவும் தற்போது வன இலாக்கா அதிகாரிகள் அவ்விவசாய காணிகளுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அரசியல் வாதிகள் பல தடவைகள் பேசியும் இன்னும் மக்களுக்கு சிறந்த பெறுபேற்றினை தரவில்லையெனவும் அவ்விவசாய காணியில் விவசாயம் செய்ய அனுமதியை பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் தேர்தல் நடை பெற முன்னர் அதிமேதகு ஐனாதிபதியாகிய தங்களுடைய ஆதரவினை விவசாய மக்களுடைய நலன் கருதி வழங்குமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
