கல்வி கற்ற பாடசாலைக்கும் தனது பெற்றோருக்கும் நற்பெயரை பெற்றுக் கொடுக்க வேண்டுமென ,றைவனை பிராத்திப்பதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரும் அகில ,லங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரனதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வாழ்த்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலயே மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அவ் வாழ்த்து செய்தியில் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.
கல்விப் கல்வி பொதுத்தராதர சாதாரனதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது அறிவு மட்டத்தை மேலோங்கும் வகையில் சிறந்த முறையில் பரீட்சைகளின் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் என்னால் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர்களும் தங்களுடைய அடைவு மட்டத்தை அதிகரிக்க திறமையாக செயற்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சாத்திகள் எமது மாவட்டத்தின் பெருமையை ,லங்கையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாவட்டமாக திகழ செய்வதற்கு பரீட்சையில் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே பரீட்சாத்திகள் அனைவரும் எவ்வித ,டையூறும் ,ன்றி சிறந்த முறையில் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று தனது பாடசாலைக்கும் தனக்கு கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு பெருமைசேர்க்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ,றைவணைப் பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.