தென்கிழக்கு பல்கலையில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு!




எம்.வை.அமீர்-

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், விரிவுரையாளர்களையும் ஏனைய ஆய்வாளர்களையும் ஆய்வு மற்றும் வெளியீடு சார்ந்த செயற்படுகளில் ஊக்குவிக்கும் பொருட்டு 2017-11-08 ஆம் திகதி இரு செயலமர்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தியது.

உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ், ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பங்குபற்றுதலுடன், பதில் நூலகர் திருமதி எம்.எம்.மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விரு செயலமர்வுகளிலும் SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தின் வாடிக்கையாளர் வழிகாட்டி, இந்தியாவைச் சேர்ந்த விஜய் சேக்கர் ரெட்டி வளவாளராக கலந்துகொண்டார்.

மில்லியன் கணக்கில் ஆய்வுக்கட்டுரைகள் சுட்டி செய்யப்பட்டு 22800 பருவ வெளியீகளை உள்ளடக்கிய, SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தில் இங்குள்ள சில விரிவுரையாளர்களும் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரத்து சிறந்து விளங்கும் அதேவேளை ஏனைய ஆய்வாளர்களும் அவர்களது ஆய்வுக்கட்டுரைகளை குறித்த தளத்தில் பதிவிடுவதன் மூலம் அதிக பயனை பெறக்கூடியவாறும், அதிக மேற்கோள்களின் ஊடாக (Citations) உயர்வைப் பெறுவதை நோக்காகக் கொண்டுமே குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலாவது செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவிலில் வளாகத்திலும் மற்றயது சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் முறையே தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.எம்.தாரீக், பிரயோக விஞ்ஞான பீட, பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னூடீன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -