குற்றவாளியொருவர், நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றிலேயே விஷம் அருந்தியதால் பரபரப்பு.!

ந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர், நீதிமன்ற மறியலில் வைத்து விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2010ஆம் ஆண்டு, சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கண்காணிப்பாளரை ஹெய்யந்துடுவை பகுதியில் வைத்துத் தாக்கியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கம்பஹா நீதிமன்றில் வழங்கப்பட்டது. அதில், குறித்த நபருக்கு ஐந்தாண்டு கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில், மறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென உடல் சுகயீனம் உற்றார்.

உடனடியாக அவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை ஆராய்ந்த மருத்துவர்கள், அவர் விஷம் அருந்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி தற்போது அபாய நிலையைத் தாண்டி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -