அட்டாளைச்சேனையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்


எம்.ஜே.எம்.சஜீத்-

தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (10) அட்டாளைச்சேனை றகுமானியாபாத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது உத்தேசிக்கப்பட்டுள்ள எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் தேசிய தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் அக்கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் கொள்கைபரப்புச் செயலாளர் எப்.எம்.நழீர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய முறையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -