வெவ்வேறு சுற்றிவலைப்பில் இருவர் கேரளா கஞ்சாவுடன் கிண்ணியாவில் கைது


ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா அல்இர்பான் வித்தியாலய வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் 5 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடூப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.பைசல் நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த வயது24 இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறுநேற்றிரவு(10) கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசகிய தகவலையடுத்தே இக்கைது இடம்பெற்றதாகவும் மேலும் தெரிவித்தனர்.

இன்னுமொருவர் இன்று(11) காலை கிண்ணியா நடுத்தீவு ஆயுல்வேத வைத்தியசாலை அருகில் வைத்து பத்து கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வயது24 நடுத்தீவைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவூம் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனை செய்துவருவதுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -