நாச்சியாதீவில் பகல் இரவு உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

நாச்சியாதீவு - படையப்பா விளையாட்டுக் கழகம் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்து நடத்தும் பகல் இரவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி, இம்மாதம் 29 ஆம், 30 ஆம் திகதிகளிலும் அக்டோபர் மாதம் முதலாம் திகதியும், நாச்சியாதீவு பஸ்மி பொது விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ரீதியாக உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகமும் இதில் பங்குபற்ற முடியும் என, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மொஹமட் தாஸிம் தெரிவித்துள்ளார்.

அணிக்கு ஏழு பேர் கொண்ட இப் போட்டித் தொடரில் பங்குபற்ற, இம்மாதம் 29 ஆம் திகதி இரவு 10 மணிக்கு முன்பதாக பதிவுக் கட்டணமான ரூபா 3,000 செலுத்தி பதிவு செய்து கொள்ளுதல் கட்டாயமானது.

அத்துடன், உதைப்பந்தாட்ட பாதணிகள், சீருடை, அடையாள அட்டை உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். வெற்றி பெறும் அணிக்கு, ரூபா 75 ஆயிரம் பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும் என்றும், இரண்டாம் பரிசாக 35 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கி வைக்கப்படும் என்றும் குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலதிகத் தகவல்களுக்கு, குழுத் தலைவர் - மொஹமட் தாஸிம் - 077 99 79 590 மற்றும் 077 17 30 734 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -