நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களாக மின்சார தடை ஏற்பட்டுள்ளமையினால் அப்பகுதி மக்கள் அசௌகரித்திற்குள்ளாகியுள்னர்
16.09.2017 அதிகாலை முதல்மின்சாரம் வினியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது
நோட்டன் விமல சுரேந்திர மின் நிலையத்தை அன்மித்த காசல்ரி பிரதேசத்தில் 500 மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்
அதிக மழையுடன் கூடிய சீரற்ற கால நிலையில் மின்சாரம் தடைப்பட்டுள்ளமையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் இது தொடர்பில் நோட்டன் மற்றும் கினிகத்தேன மின்சார சபைக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என மின் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.


