தேசிய கரையோர சுத்தம் பேணல் தினம்-2017.




முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்-

ன்று நாடெங்கிலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக எமது நாட்டிலுள்ள கடற்கரையோரங்கள் சுத்தப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இவ் வருடமும் செப்டம்பர் மாதம் 15 தொடக்கம் 22 வரை நாடுபூராகவும் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைவாக இன்று நிந்தவூர் பிரதேச கரையோர பகுதி சுத்தம் பேணல் நிகழ்வின் அங்குராப்பண வைபவம் நிந்தவூர் 4ம், பிரிவு கடற்கரை வீதியிலுள்ள சிறுவர் பூங்காவில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான "ஆரிப் சம்சுதீன் அவர்கள் கலந்துகொண்டதோடு நிந்தவூர் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளரும் ஏனைய உத்தியேகத்தர்களும் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

மேலும் நிகழ்வினை தொடர்ந்து கரையோரங்கள் சுத்தம் செய்யும் பணி ஆரம்பமானது. இதில் பொதுமக்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்களென பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -