மாவட்ட விவசாயப் பணிப்பாளராக

பி. முஹாஜிரீன்-

ம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ் அவர்கள் அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (17) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பதவியுயர்வுடனான நியமனக் கடிதத்தின் பிரகாரமும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட கச்சேரியில் நடைபெற்ற இப் பதவியேற்பு நிகழ்வின்போது, ஓய்வுநிலை மாவட்ட விவசாயப் பணிப்பாளரான ஏ.ஆர்.ஏ. லத்தீப் அவர்களும் கலந்துகொண்டார்.

இலங்கை விவசாய சேவை முதலாம் தர அதிகாரியான எம்.எஸ். அபுல் கலீஸ் அவர்கள் இலங்கை விவசாயத் திணைக்களத்தின் மத்திய அரசின் விவசாய விரிவாக்க சேவையில் இணைந்து 1992 முதல் 2009 வரை உதவி விவசாயப் பணிப்பாளராகவும் 2009 முதல் 2017 வரை பிரதி விவசாயப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு தகுதியான அதிகாரியொருவர் நியமிக்கப்படும்வரை தொடர்ச்சியாக இவரே அப் பொறுப்புக்களிலும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -