அம்­பாறை மாவட்ட காணிப்­பி­ரச்­சி­னைகளுக்குத் தீர்­வு­காண அமைச்சர் ஹக்கீம் ­வி­ஜ­யம்..!

ம்­பாறை மாவட்­டத்­தில் நீண்­ட­கா­ல­மாக நில­வி­வரும் காணிப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணும் நோக்கில், ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், உயர்மட்ட கு­ழு­வுடன் நேற்று (24) திங்­கட்­கி­ழ­­மை கள விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டார். அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, வன பரிபாலன திணைக்கள பணிப்பாளர் ஏ.ஆர்.என் முனசிங்க உள்­ளிட்ட அதி­கா­ரிகள், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள், தொல் பொரு­ளியல் திணைக்­கள அதி­கா­ரிகள், நில அளவைத் திணைக்­கள அதிகா­ரிகள் உள்­ளிட்ட உயர்­மட்ட குழு­வினர் சர்ச்­சைக்­கு­ரிய இடங்­க­ளுக்குச் சென்று கலநிலவ­ரங்­களை நேரில் கண்­ட­றிந்­தனர்.

கா­லை 8.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணி­வரை உண­வுக்குகூட நேரம் ஒதுக்காமல் மக்களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள வட்டமடு, கிரான் கோமாரி, வேகாமம், பாலையடி வட்­டை மற்­றும் கரங்கோ போன்ற ­இ­டங்­க­ளுக்கு சென்ற குழு­வினர், சம்பந்தப்பட்ட காணி உரி­மை­யா­ளர்­களை நேரில் சந்­தித்து, பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான நடவடிக்கைகள் குறித்து ஆரா­ய்ந்­த­னர்.

இதன்போது, வட்டமடு விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்ததுடன், இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்வதுக்கான உறுதிமொழியினையும் வன பரிபாலன திணைக்கள தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இவ்­வி­ஜ­யத்தில் பாரா­ளு­மன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், எம்.ஐ.எம். மன்­சூர், மாகாண­சபை உறுப்­பி­னர்­க­ளான ஆரிப் சம்­சு­தீன், ஏ.எல். தவம், அமைச்சின் இணைப்புச் செயலாளர் யூ.எல். முபீன், ­கட்­சி­யின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, உயர்­பீட உறுப்­பினர் பளீல் பி.ஏ., ­கட்சி முக்­கி­யஸ்­தர்கள், பிர­தேச சபை உறுப்பினர்கள், பாதிக்­கப்­பட்ட மக்கள் என பலரும் கலந்­து­கொண்­ட­னர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -