நீண்ட வரட்சிக்குப் பின்னர் பல பகுதிகளில் மழை - மக்கள் மகிழ்ச்சி

க.கிஷாந்தன்-
நீண்ட வரட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் 27.07.2017 அன்று மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து வரும் மழை, மிகவும் பலனுள்ளதாக அமைந்துள்ளது. எனினும் கடந்த சில மாதங்களாக குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -