யாழ்ப்பாணத்தில் சேவையில் இருக்கும் போது உயிரிழந்த நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் மனைவிக்கு உதவிப் பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர இந்தப் பதவியை வழங்கியுள்ளார்.
உயிரிழந்த பிரேமச்சந்திரவின் மனைவி ஏற்கனவே 9 வருடங்கள் பொலிஸ் சேவையில் சேவையாற்றிவிட்டு முன்ஓய்வு பெற்றுள்ள ஒருவராவார். இவரது கணவனின் சேவையைப் பாராட்டும் வகையில் இவருக்கு பதவியுயர்வுடன் பொலிஸ் சேவையில் உத்தியோகம் வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹேமச்சந்திரவின் சிலாபம் நகரில் நடைபெற்ற இறுதிக் கிரியையின் போது இப்பதவியை பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -