தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க பௌத்த தேரர்கள் வருவதை வரவேற்கிறேன் - பிரசன்னா இந்திரகுமார்

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ட்டக்களப்பில் மாற்று இனத்தவர்களால் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர்களைப் போன்று இன்னும் பல பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வர இருக்கின்றார்கள் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் அமையவிருக்கும் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக் கட்டிடத்துக்குரிய அடிக்கல் செவ்வாய்க்கிழமை (25.07.2017) நாட்டப்பட்டது. இதில் அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள் எந்தவித அபிவிருத்திகளையும் காணவில்லை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியிலுள்ள வைத்தியசாலைகளை புனரமைப்பு செய்யவேண்டும் என நான் கிழக்கு மாகாண சபையில் பிரேரணைகளை முன்வைத்துள்ள போதும் தங்கள், தங்களுடைய பகுதியிலுள்ள வைத்தியசாலைகளைத்தான் புனரமைப்புச் செய்கின்றார்கள். இதனையிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் பங்காளியாக இருப்பதையிட்டு வெட்கித் தலைகுனியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்படுகின்ற அபிவிருத்திப் பங்கீடுகள் விகிதாசார முறையில் முன்வைக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால். விகிதாரத்தை அமுல்படுத்த பௌத்த தேரர்கள் வரவேண்டியிருக்கும். மட்டக்களப்பில் தற்போது இருக்கும் அம்பிட்டிய சுமணரத்ன பௌத்த தேரர் போன்று தமிழர்களுக்காக குரல் கொடுத்து நியாயம் பெற்றுத் தர இன்னும் பல பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வர இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றின் காணியை அபகரிக்கின்றபோது அங்கு சுற்றியுள்ள அரசியல்வாதிகள், அவற்றைத் தடுத்து நிறுத்தியிருந்தால் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அங்கு களத்திற்குச் சென்று தமிழ் மக்களுக்கு நீதி கேட்டிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -