நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் நன்நீர் மீன்வளர்ப்பு வேலைத்திட்டம் மத்திய மாகாண நன்நீர் மீன்வளர்ப்பு அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெருந்தோட்ட மக்களின் போசாக்கை மேம்படுத்தும் வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பெருந்தோட்ட பகுதிகளில் 100 நன்நீர் மீன் வளப்பு திட்டத்தின் முதல்கட்டம் 22.07.2017 ஆரம்பிக்கப்பட்டது.
மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் ஸ்ரீ லங்கா சுதந்தி ர கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் ரணசிங்க அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.