முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் (84) சற்று முன்னர் காலமானார்.

ல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் (84) காலமானார்.

கடந்த சில நாட்களாக சுகயீனமுற்று, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதி சார்பாக ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற அவர் 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராககடமையாற்றினார்.

இதன்போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு அமைச்சராகவும், வர்த்தகம், வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

அதன்பின்னர் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற அவர், சில காலம் குவைட் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் கடமையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -