கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை – இயல்பு நிலை பாதிப்பு (video)

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கடும் மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

மழையுடன் ஏற்பட்ட கடும் காற்றினால் வீடுகளின் கூரைகள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், கிரிபத்கொடை பகுதியில் வெசாக் தோரணையொன்றும் வீழ்ந்துள்ளது. கொழும்பின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இன்று பிற்பகல் முதல் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -