எம்.எஸ்.எம்.ஸாகிர்-
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் கொழும்பு மாவட்ட சம்மேளன புனரமைப்புக் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மட்டக்குளியில் நடைபெறவுள்ளது. இது அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசிய தலைவர் கலாநிதி அல்ஹாஜ் பீ.எம் பாருக் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்வில், சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாகார், போஷகரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் பொதுச் செயலாளர் எம்.அஜிவதீன், பொருளாளர் எம்.நபீல், ஆகியோர் உட்பட சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக் கூட்டத்துக்கு கொழும்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இக் கூட்டத்தை அஸிஸ் பாய் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.