அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு கண்கானிப்பு கமரா அன்பளிப்பு செய்த அமைச்சர் நஸீர்




சப்னி அஹமட்- 

ட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் சொந்த நிதியிலிருந்து கண்கானிப்பு கமெரா வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த குறித்த கமெராவை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பாடசாலைச்சமூகம் கேட்டுக்கொண்டதற்கு இனங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து பெற்றுக்கொடுத்தார்.

இதன் போது, அகில இலங்கைரீதியில் இடம்பெற்ற பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையின் புதிதியா நிர்மானிக்கப்பட்டுவரும் கட்டிட வேலைத்திட்டங்களை பார்வையிட்டார். இந்நிகழ்வில், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நயீம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -