ஒலுவில் இளைஞர்களுக்கு நீர் வழங்கல் திணைக்களத்தில் நியமனம் வழங்கிவைப்பு..!

எம்.எம்.ஜபீர்-
கர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் அம்பாரை மாவட்டத்தில் முதல்கட்டமாக ஒலுவில் பிரதேசத்தினை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் ஊழியர்களுக்கான நியமனக் கடிதத்தினை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரகுமத் மன்சூரினால் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை ரகுமத் மன்சூரின் அலுவகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது. இதில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்பாளர் ஐ.எல்.ஹமீட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒலுவில் மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -