பாராளுமன்றத்தில் கெளரவத்தை மதித்து நடக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய உரை

பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் மதிப்பையும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மதிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முக்கிய அமைப்பாக பாராளுமன்றம் காணப்படுகின்றது. பாராளுமன்றத்தின் பாரம்பரியம், நடைமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளுக்கு எதிராக எவரும் செயல்பட முடியாது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவதூறாக பேசியுள்ளனர் என்பதை பாராளுமன்ற ஹன்ஸாட் அறிக்கையின் மூலம் தாம் அறிந்து கொண்டதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

இது பாராளுமன்றத்தின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிரான செயல்பாடாகும். இவ்வாறான செயல்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறுமாயின், குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட உரையில் மேலும் தெரிவித்தார்.(DC)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -