நிந்தவூர் பொதுச் சந்தையில் வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க்கிழமை மாபெரும் மலிவு விற்பனைச் சந்தை("பொல") ஆரம்பிக்கபட்டுள்ளது. சிங்கள வியாபாரிகள் நிந்தவூர் மக்களுக்கு அண்றாடத் தேவைக்கான உலர் உணவு பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை மிகக் குறைவான விலையில் விற்பனை செய்கின்றார்கள் என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
அந்த வகையில் இன்று நிந்தவூர் பொதுச் சந்தையில் நடைபெற்ற மலிவுச் விற்பனை சந்தைக்கு ஏராளமான மக்கள் அன்றாட தேவைப் பொருட்களை வாங்கிச் சென்றதைக் காணமுடிந்தது.
ஊருக்குள் நெருப்பு விலைக்கு மரக்கறி, உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் போது வாரத்தில் ஒருநாளாவது மக்களுக்கு இது போன்ற சந்தைகள் ("பொல") அமைவதென்பது மக்களால் வரவேற்கதக்கதாகும்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.