ஊடகவியலாளர் கீத் தாக்குதல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி விளக்கமறியலில்



டகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இராணுவ அதிகாரியை குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று கைதுசெய்யப்பட்ட இராணுவ அதிகாரியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.(வீ)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -