இன்று என் வாழ்வில் நடந்ததை உம்மிடம் கவலையுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இன்று தாடியை சேப் பண்ணுவதற்காக சலூன் கடைக்கு சென்றேன் நான் அவரிடம் கேட்டேன் வெள்ளிக்கிழமை எத்தனை மணி வரை கடை திறப்பீர் என்றேன் அவர் சொன்னார் காலை 9 மணி தொடக்கம் 11 .30 வரை கதவை திறந்து முடியை வெட்டுவோம் 12 மணி தொடக்கம் 2 மணிவரை கடையை மூடிவிட்டு வெட்டுவோம் என்றார்.
ஏன் அப்படி உங்க சங்கத்தின் கொள்கையா என்று கேட்டேன் இல்லை உமது சமயத்தின் கொள்கை என சிரித்தார் ஒரு சில மார்க்கட் வியாபாரம் செய்பவர்கள் ,மற்றும் வேறு வியாபாரம் செய்யும் ஒரு சிலர் வியாபாரம் பண்ணிவிட்டு வந்து வெட்டுவார்கள். அவர்கள் மூட சொல்லிவிட்டு வெட்ட சொல்பார்கள் நீங்களும் வந்து மெதுவாக தட்டினால் திறப்பேன் என்றார்.
வெள்ளிக்கிழமை ஜும்மாஹ் நேரத்தில் தொழாமல் புது மாப்பிள போல மக்களுக்கு பயந்து சலூன் கடையை மூட சொல்லிவிட்டு முடிவெட்டும் , புது தாடி கட் வைக்கும் சகோதரர்களே அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்
கடையை மூடினாள் மக்கள் உங்களை பார்க்கமாட்டார்கள் உண்மைதான் ஆனால் அல்லாஹ் உங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
அதிகாலை பனி ,குளிர் ,தூக்கம் பாராமல் ஓடி ஓடி சென்று ஹாலாலாக உழைக்கின்றேன் என மனதில் நினைக்கின்றீர் உண்மைதான் வியாபாரம் ஹலால் தான் படைத்தவனும் வியாபாரத்தை விரும்புகின்றான் தனது தாய் ,தந்தை ,பிள்ளை மற்றும் மனைவிகளுக்காக உழைக்கும் நீங்கள் நாளை மறுமைக்காக உங்களுக்கு உழைக்க மறந்திட வேண்டாம் தொழுது கொள்ளுங்கள் ஐந்து நேரத்தோடு இதையும் தொழுது மறுமைக்காக உழைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லதுஅல்-குரான் 62:
முடியை ,தாடியை வெட்டித்தான் பள்ளி செல்ல வேண்டும் அவசியமில்லை முடிந்தவரை குளித்துவிட்டு சுத்தமாக செல்லுங்கள் முடிகளையோ ,தாடிகளையோ வேறு தினத்திலோ அல்லது வெள்ளி காலையில் வைத்துக்கொள்ளுங்கள் ஜும்மாஹ் நேரம் நெருங்கினால் வெட்ட தேவை இல்லை வீட்டுக்கு புறப்பட்டு பள்ளிக்கு சென்று வந்த பின் வெட்டிக்கொள்ளுங்கள்.
ஜும்மாஹ் நேரத்தில் வியாபாரம் செய்யும் ,சந்தை ,கடைகள் போன்றவற்றை எம் உலமாக்கள் அறிந்து ஒரு தினத்தை ஒதுக்கி அங்கு சென்று ஜும்மாஹ் நேரத்தில் மூடி விட்டு பள்ளிக்கு செல்லுங்கள் அது போன்று அனைத்து தொழுகைக்கும் செல்லுங்கள் என அழகிய முறையில் எடுத்து கூறுவது மிகவும் சிறந்தது காரணம் மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான்.
ஜும்மாஹ் பயான்களில் ,ஏனைய சொற்பொழிவுகளிளும் கொள்கை சண்டைகளை பேசாமல் நல்ல விடயங்கள் சுவர்க்க, நரகம் , மறுமை இஸ்லாமிய வாழ்க்கை நடமுறை பல அதை அதிகமாக பேசுங்கள்.
ஸபா ரௌஸ் கரீம்,
கல்முனை.