சமூக வலைத்தளங்கள் பிரபாகரனை இறைவனாக்கியுள்ளன - கோட்டாபய

மூக வலைத்தளங்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறைவனாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக குரல் கொடுக்க சமூக வலைத்தளங்களில் யாரும் முன்வருவது இல்லை எனவும் தன்னையும், மஹிந்த ராஜபக்‌ஷவையும், படையினரையும் கள்வர்கள், கொலைகாரர்கள் என்று சித்தரித்து பிரசாரம் செய்யவே முன்வருகின்றனர் எனவும் கோட்டாபய மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இருப்பதாகவும் யுத்தக் குற்றம் தொடர்பில் அவர்களே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் கோட்டாபய இதன்போது கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -