எம்.எம்.ஜபீர்-
சவளக்கடை பொலிஸ் பிரிவின் அன்னமலை பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு லெமொன் ஹார்வெஸ்ட் என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் அணுசரணையில் அன்னமலை மீனவர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப், கௌரவ அதிதியாக லெமொன் ஹார்வெஸ்ட் என்டர்பிரைஸஸ் பணிப்பளார் ஏ.எம்.நிப்ராஸ், அதிதிகளாக முகாமையாளர் ஏ.ஆர்.நசீர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.பாஸித், கல்வி மேம்படுத்தல் உத்தியோகத்தர் ஏ.டில்சாத், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.