தற்போது தனியார் மருத்துவ பீடம் அமைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன என்று வினவியபோது தனியார் மருத்துவ பீடம் கிழக்கிலும் அமைக்கப்பட வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா தெரிவித்தார்.
தனியார் வைத்திய சாலைகளில் அரசாங்க வைத்தியர்கள் இணைந்து தொழில் புரியும் போது, ஏன் தனியார் வைத்திய பீடங்கள் அமையக் கூடாது. உழைப்பதுக்கு தனியார் மருத்துவ மனை வேண்டும் படிப்பதுக்கு தேவை இல்லையா..? தனியார் மருத்துவ பீட கல்வித் தரம் அறிய வேண்டுமானால் இறுதியாண்டு சகல அரச மருத்துவ பீட மற்றும் தனியார் வைத்திய பீட மாணவர்களுக்கு ஒரு பொதுப் பரீட்சை நடத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலைத் தேச நாடுகளில் பல தனியார் மருத்துவ பீடங்கள் பலவுண்டு என்றால் ஏன் நம் நாட்டில் அமையக் கூடாது .
மேலும் கூறுகையில் தற்போது;
இலங்கையில் கல்விக்கு தனியார் துறை வழங்கும் சேவை அளப்பெரியது , கல்வித் தரத்தினை பரீச்சைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம், வெளி நாடுகளில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழக சான்றிதல்கள் பெறுவதன் மூலம் இலங்கையர்கள் சர்வதேச ரீதியில் வேலை வாய்ப்புகள் பெற வழி வகுக்கும் என்றார்