முஸ்லீம் காங்கிரசை ஆரம்பித்த தவிசாளரும் செயலாளரும் சந்திப்பு-படம்


முஸ்லீம் காங்கிஸ்ரஸ் ஸ்தாபகத் தவிசாளர் சட்டத்தரணி ஷேகு இஸ்ஸதீன், ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம் ஏ.கபூர் ஆகியோர் அவசர சந்திப்பொன்றினை அட்டாளைச்சேனையில் மேற்கொண்டுள்ளனர். 

இன்று கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சனைகள் பிரிவுகள் தொடர்பில் பேசிய ஸ்தாபகத் தவிசாளர் பல கருத்துக்களை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழித்துவிட முடியாது யாராலும் இக்கட்சிக்கு தீங்கிழைக்க இடமளிக்கவும்  கூடாது. என்றும் தெரிவித்த ஸ்தாபகச் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் இன்றய தவிசாளர் பஷீரின் நடவடிக்கை மிகமோசமானதாகும் அவருடைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை மோசமான முறையில் குற்றஞ்சாட்டுதல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் களங்கம் ஏற்படுவது போல் நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்றய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாக்கப்படவேண்டிய கட்டாயத் தேவை. எனவே என்னை கட்சியின் தலைமை அழைத்தால் அவருடன் சென்று பேசவும் கட்சியைப் பாதுகாக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -