இன்று கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சனைகள் பிரிவுகள் தொடர்பில் பேசிய ஸ்தாபகத் தவிசாளர் பல கருத்துக்களை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழித்துவிட முடியாது யாராலும் இக்கட்சிக்கு தீங்கிழைக்க இடமளிக்கவும் கூடாது. என்றும் தெரிவித்த ஸ்தாபகச் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் இன்றய தவிசாளர் பஷீரின் நடவடிக்கை மிகமோசமானதாகும் அவருடைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை மோசமான முறையில் குற்றஞ்சாட்டுதல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் களங்கம் ஏற்படுவது போல் நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்றய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாக்கப்படவேண்டிய கட்டாயத் தேவை. எனவே என்னை கட்சியின் தலைமை அழைத்தால் அவருடன் சென்று பேசவும் கட்சியைப் பாதுகாக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.