16பேரை காவுகொண்ட களுத்துறை படகு விபத்து - படகோட்டி 07ஆம் திகதிவரை விளக்கமறியல்

களுத்துறை - கட்டுக்குறுந்த பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் படகை செலுத்திய படகோட்டியை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

படகோட்டி கைது செய்யப்பட்டு இன்றைய தினம் களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே படகோட்டி கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் 20 இற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -