ஈரோடு மாவட்ட அதிமுக மீனவர் அணிச் செயலாளர் ஃபரூக் அலி, ஜெயலலிதா பேரவை நகர இணைச்செயலாளர் கமல் பாட்ஷா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதற்கு காரணம் கூறும் சிலர் ஜெயலலிதாவின் வீட்டுப்பணிப்பெண் போன்று செயற்பட்ட சசிகலாவுக்கு தமிழ் நாட்டையாளும் கட்சியின் செயலாளர் பதவி கொடுப்பதா..? என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவின் ஒரு பிரிவினர் கடலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் புகைப்படத்தை கைகளில் ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த 2011 டிசம்பர் மாதமளவில் ஜெயலலிதாவினால்
அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டிருந்ததும் கவனிக்கப்படவேண்டியது என்றும் தெரிவித்துள்ளனர்.