அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் விஷேட கல்வி ஆசிரிய பயிலுனர்களினால் எமது பிரதேசத்தில் உள்ள விஷேட தேவையுடைய மாணவர்களின் பாடசாலைகளை இனங்;கண்டு அனுபவக் கற்கை நெறி கற்றல் நிகழ்வு அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்த்தீன் வித்தியாலயத்தில் அதன் அதிபர் ஏ.ஐ.எம். பாயிஸ் தலைமையில் (26) இன்று நடைபெற்றது.
விஷேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அவர்களுக்கு விஷேட ஆசிரிய பயிலுனர்களினால் சைகை மொழி கற்கை நெறி, கண் தெரியாதவர்களுக்கான (BRAIL) பிரயில் முறை கற்றல் அனுபவ பகிர்வு, தொழில் வழிகாட்டலும் கற்பித்தல் உபகரணம் தயாரித்தல் போன்ற பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் பிரதம அதிதியாகவும், விஷேட அதிதியாக ஜப்பான் நாட்டின் விஷேட பிரிவு ஆசிரியரான நாஹிரோ, கல்லூரியின் உப பீடாதிபதி எம்.பி.ஏ. அஸிஸ், மற்றும் விரிவுரையாளர்களும், ஆசிரிய பயிலுனர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.