பி.முஹாஜிரீன்-
இன்று வெள்ளிக்கிழமை (27) தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயம் நீரில் மூழ்கியுள்ளது.
பாடசாலைக் கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மாணவர்கள் வெள்ள நீரில் சிரமங்களுடன் பாடசாலைக்கு சமூகமளித்தனர். வகுப்பறைகளுக்குள்ளும் நீர்புகுந்துள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன.
ஓவ்வொரு வருடமும் வெள்ளத்தில் மூழ்கும் இப்பாடசாலை வளாகத்தைச் சுற்றி உரிய வடிகான் வசதிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், ஆனர்த்த பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டம் ஒன்று உடன் அமைக்கப்பட வேண்டுமென பாடசாலை சமூகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.