ஞானசாரவை நாய் கூண்டில் அடைப்போம் என ஆட்சி பீட மேறிய தலைவர்கள் எங்கே?அதாஉல்லாஹ்



ஞானசார தேரரின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில் அவரை நாய் கூட்டில் அடைப்போம் என்றவர்கள் சாதரண மனிதர்கள் பொலிஸ் நிலையம் ஏறி இறங்குவது போல் ஏறித் திரிகின்றனர். இதற்காகதான் மக்கள் வாக்களித்து ஆட்சிபீடமேற்றினர் ஏன் அதிகார தலைவர்களுக்கு உரிய உரிய இடங்களில் பேசி தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்தார். 

இன்று(04) கிழக்கு வாசல் இல்லத்தில் இடம் பெற்ற மருதமுனை இளைஞர்களுடான சந்திப்பில் தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாஹ் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

நாங்கள் மிகத் தெளிவாக இருந்தோம்.இது சர்வதேசத்தின் திட்டமிடலுடன் மிகப் பாரிய சதி செய்து இந்த நாட்டின் முஸ்லீம் களுக்கு எதிரான வித்து என்பதை கூறினோன். பணத்துக்காகவும் அதிகார கதிரைக்காகவும் ஆசை கொண்ட எம்மவர்கள் சூழ்ச்சிகளில் மூழ்கினர்.இன்று எம் சமுகம் எதிர்கொள்ளும் பிரச்சினை க்கு முக்கிய சூத்திரகாரிகள் இவர்கள் தான்வரலாறு நெடுகிலும் சுயநல அரசியலுக்காக காட்டிக் கொடுப்புகள் இவ்வாறு தான்நிகழ்ந்திருக்கிறது என்றார்.

இந்த நாட்டின் ஸ்திரமற்ற தண்மை தொடர்பில் அணைவரும் கருத்து கூறுகிறார்கள் முஸ்லிம் மக்களை பகடைக்காய்களாக பாவித்து அரசியல் செய்து பழகி தலைவர்கள் இது ஒரு தேர்தல் காலமென்றால் எவ்வாறு மேடைகளில் முழங்கி இருப்பார்கள் அதுதான் இன்று எமது சமுகத்தின் நிலை 
புத்திசாதுர்யமாக சமுகம் எடுக்க வேண்டிய முடிவுகளை சுய நலத்திற்காக மாற்றி அமைக்கின்றவர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.

பொதுபல சேனாவுக்கெதிராக நான் பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையின் அர்த்தம் எம் தலைவர்கள் என்று சொல்லுபவர்கள் புரிவதற்க்கு பல கால மெடுக்கும் என்றார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -