சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பையும் மதச் சுதந்திரத்தையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

அகமட் எஸ்.முகைடீன்-
ட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரர் ஆகியோரின் இன நல்லுறவை சீர்குலைக்கும் வகையிலான நேற்றைய செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அவர்களுக்கு எதிராக அரசு உடன் சட்ட நடவடின்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடும்போக்குவாதிகளினால் நேற்று (3) மேற்;கொள்ளப்பட்ட அநியாயமான நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்க்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்.

மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல இனத்தவர்களும் இன நல்லுறவை பேணி வரும் நிலையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்ச்சியாக செயற்பட்டுவருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். நேற்றைய தினம் மிகவும் அநாகரீகமாக தமிழ், முஸ்லிம் மக்களை துவேச வார்த்தைகளால் திட்டி மட்டக்களப்பு வீதியில் அட்டகாசம் புரிந்துள்ளார். இது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

அத்தோடு ஞானசார தேரர் வாகனப் பேரணியோடு மட்டக்களப்பு நகருக்குள் பிரவேசிக்க முற்பட்டிருந்தார். மட்டக்களப்பு நகரில் உள்ள அமைதியை சீர்குலைப்பதற்கே இவர் முயற்;சித்திருந்தார். இந்நிலையில் ஞானசார தேரர் பொலிசார் முன்னிலையிலேயே நீதி மன்றத்தின் தீர்ப்பை கிழித்தெறிந்திருந்தார். ஆனால் பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டில் இருப்பது பொதுமகனுக்கொரு சட்டம் தேரருக்கு ஒரு சட்டம் அல்ல. எல்லோருக்கும் ஒருவிதமான சட்டமே காணப்படுகிறது. எனவே பொலிசார் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெரும்பாண்மை கடும்போக்குவாதிகளினால் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இன ரீதியான அச்சுறுத்தல் மற்றும் அடக்கு முறைகளை கண்டும் காணாமலும் இருக்க முடியாது. இனநல்லுறுவை பேணிப் பாதுகாப்பதற்காகவே நாட்டில் நல்லாட்சி சிறுபான்மை மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. கடந்த அரசின் காலத்தில் இனவெறியாட்டங்கள் தலைதூக்கி இருந்தது, இதனை புதிய நல்லாட்சி இல்லாமல் செய்யும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்தனர். எனவே இந்நல்லாட்சி அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்யாது கடும்போக்குவாதிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுபான்மை மக்கள் இச்சந்தர்ப்பத்தில் அமைதிகாத்து செயற்பட்டமை பாராட்டத்தக்கதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுபான்மை சமூகத்தினர் பொறுமையுடன் செயற்பட வேண்டும். அத்தோடு முஸ்லிம்கள் தமது ஐவேளை தொழுகையின்போதும் நாட்டில் சுமுக நிலை ஏற்படுவதற்கு பிராத்திக்குமாறு வேண்டிக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பையும் மதச் சுதந்திரத்தையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -