மசூ­ரா­சபை முடி­வெ­டுத்தால் நான் விலகிச் செல்லத் தயா­ர் - ஹசன் அலி

“முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பாட்டு நிலையில் எனக்கு எக்­கதி ஏற்­பட்­டாலும் கட்­சியை நான் ஒரு போதும் நீதி மன்றம் சென்று சவா­லுக்கு உட்­ப­டுத்­த­மாட்டேன். இன்று எனக்கு எதி­ராகக் கட்­சிக்குள் சதி­வ­லையே தீட்­டப்­பட்­டுள்­ளது”

இவ்­வாறு முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹஸ­னலி கவலை வெளி­யிட்டார்.அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள முஸ்லிம் காங்­கிரஸ் மத்­திய குழு உறுப்­பி­னர்கள், ஆத­ர­வா­ளர்கள், முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். 

செய­லாளர் நாயகம் ஹஸ­ன­லியின் அழைப்பின் பேரில் நிந்­த­வூ­ரி­லுள்ள அவ­ரது இல்­லத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை மாலை நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் பெருந்­தொ­கை­யானோர் கலந்து கொண்­டனர். 

முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­யு­ட­னான பதவி தொடர்­பி­லான அதி­காரக் குறைப்பு, தேர்தல் ஆணை­யா­ளரின் அண்­மைய கடிதம் மற்றும் கட்­சிக்குள் தமக்கு ஏற்­பட்­டுள்ள நிலை­மைகள் தொடர்­பாக இக்­கூட்­டத்தில் ஹஸ­னலி தெளி­வு­ப­டுத்தி உரை­யாற்­றினார். கட்­சியின் செய­லாளர் நாயகம் பத­வியை இல்­லாமல் செய்து கட்­சியின் உயர் பீடத்­தி­லி­ருந்து என்னை நீக்­கி­விடும் சதி ஒன்று அரங்­கே­ற­லா­மெனத் தெரி­வித்த அவர்,

கட்­சிக்குள் மசூரா சபை ஒன்றை அமைத்து பிரச்­சி­னைகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி அந்த மசூ­ரா­சபை முடி­வெ­டுத்தால் நான் விலகிச் செல்லத் தயா­ரா­க­வுள்ளேன் எனவும் குறிப்­பிட்டார். 

ஹஸ­னலி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

“எனது பத­விக்­கு­றைப்பு மற்றும் புறக்­க­ணிப்­பு­க­ளுக்கு நான் கட்­சிக்கும், தலை­மைக்கும் செய்த குற்றம் தான் என்ன? 

நான் வன்மம் தீர்க்­கவோ, ஏட்­டிக்குப்­போட்­டி­யாகத் தலை­மைக்குச் சவால்­வி­டவோ இக்­கூட்­டத்­திற்கு உங்­களை அழைக்­க­வில்லை. எக்­குற்­ற­மு­மற்ற எனக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் சதி­களை தெளி­வு­ப­டுத்தி என் மனச்சு­மையை உங்­க­ளிடம் பகிர்ந்து கொள்­ளவே விரும்­பினேன். 

பல விட­யங்­களில் சமூகம் சார்ந்த அநீ­தி­க­ளுக்­கெ­தி­ராக மக்­க­ளுடன் நான் நின்று உறு­தி­யாகக் குரல் கொடுத்து வந்­தமை தான் பிரச்­சி­னைகள் ஆரம்­ப­மாகக் கார­ண­மாகும். குறிப்­பாக கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் மக்கள் ஏகோ­பித்து எடுத்த முடி­வுடன் நான் உறு­தி­யாக நின்றேன். 

இன்று இந்த நாட்டில் நல்­லாட்­சியை மலரச் செய்­தது தாமே­தா­னென மார் தட்டித் தம்­பட்­ட­ம­டிப்போர் சிலர் நம்­மி­டையே அர­சியல் பிர­மு­கர்­க­ளா­க­வுள்­ளனர். ஆனால் முஸ்லிம் மக்­களும் நானும் தான் இதற்குக் கார­ண­மென்­பதை அடித்துக் கூறுவேன். 
அன்று நம் தலைவர் மர்ஹூம் அஷ்­ரபால் ஈர்க்­கப்­பட்டு கட்­சிக்குள் நுழைந்த நான் அவ­ருடன் இணைந்து கட்சி வளர்ச்­சிக்­கா­கவும் மக்கள் நல­னுக்­கா­கவும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டுள்ளேன். 

நமது முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி மாமூல் அர­சியல் செய்­வ­தற்­கென உரு­வா­ன­தல்ல. ஆயுதக் குழுக்­க­ளுடன் ஈர்க்­கப்­ப­டாது, முஸ்லிம் இளை­ஞர்­களைக் காப்­பதில் ஜன­நா­யக ரீதியில் போரா­டு­வ­தற்கு ஆரம்­பித்த இயக்­க­மே­யாகும். 

ஆனால் இன்று கட்­சியின் ஆரம்ப நோக்­கங்­களை மறந்து சோபை இழந்­துள்­ளது. இத்­த­கைய மாமூல் அர­சியல் கட்­சி­யாக பெனர்­களில் மட்டும் இயங்கும் கட்­சி­யாக அது மாறி­யுள்­ளமை கவலை தரு­கின்­றது. 

இதை­விட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும், ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் இணைந்து செயற்­ப­ட­லாமே என்­றுதான் கூறத் தோன்­று­கின்­றது. 

நான் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து வெளி­யேற வேண்டும். அல்­லது வெளி­யேற்­றப்­பட வேண்­டு­மென்­பதில் சிலர் குறி­யா­க­வே­யுள்­ளனர். முஸ்லிம் தேசியம் என்­ப­தற்கு வரை­வி­லக்­க­ணமே தெரி­யாத இவர்­களா முஸ்­லிம்­களின் போராட்­டத்தை முன்­னெ­டுக்­கப்­போ­கிறவர்கள். கட்சி ஆரம்­பித்த கால­கட்­டங்­களில் பல்­வேறு சவால்­களை, உயிர் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­ட­வர்கள் நாம்.

அன்று பதி­னாறு ஆயு­தக்­கு­ழுக்­க­ளி­ருந்த கால­கட்டம். அவர்­க­ளது துப்­பாக்கிக் குண்­டு­க­ளுக்கு மத்­தியில் முஸ்லிம் தேசி­யத்­துக்­காக இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்­கெ­தி­ராகப் போரா­டினோம். 

இப்­படி கட்­சியை வளர்த்த எம்மைக் கட்­சியை விட்டு வெளி­யேற்ற வேண்­டு­மென்­பதில் எவ­ரெல்­லாமோ குறி­யா­க­வி­ருந்து சதி­வலை விரித்த வண்­ண­முள்­ளனர். தலைமை எனது பதவி அதி­கா­ரத்தைத் திட்­ட­மிட்டு குறைத்­ததால் ஏற்­பட்ட முரண்­பாடு ஒரு வரு­ட­மாக நீடிக்­கின்­றது. இதனைச் சம­ரசம் செய்யப் பல குழுக்கள் என்­னிடம் வந்­தன.ஆனால் வரு­வார்கள், பேசு­வார்கள், உடன்­பாட்­டுடன் செல்­வார்கள். பின் திரும்­பியே வர­மாட்­டார்கள் என்ற நிலை­மைதான் நீடிக்­கின்­றது. 

இரவு, பக­லாக இரு­பக்­கத்­தையும் மூட்­டி­விட முனைந்­துள்­ள­வர்­களின் கைங்­க­ரி­யமே இதில் மேலோங்கி நிற்­கின்­றது. கட்­சியின் அதி­கா­ரத்தை ஒருவரி­டத்தில் குவிப்­ப­தற்­காக செய்­யப்­பட்ட யாப்பு மாற்­றம்தான் இன்­றைய முரண்­பா­டு­க­ளுக்கு முக்­கிய கார­ண­மாகும். 18 ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்ட சமயம் கரை­யோர மாவட்­டத்தை மிக இலே­சாகக் கேட்டுப் பெற்­றி­ருக்­கலாம். இதேபோல் பல சந்­தர்ப்­பங்­களில் கிடைத்த வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்­தாது விட்டு வாளா­தி­ருக்­கின்­றது முஸ்லிம் காங்­கிரஸ். 

இவை­யெல்லாம் மறைந்த தலை­வ­ருக்குச் செய்யும் பெரும் துரோ­க­மென்றே கூற­வேண்டும். இன்று பாரா­ளு­மன்றம் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாறி­யுள்­ளது. இதில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மட்­டு­மல்ல சட்­டங்­க­ளையே மாற்றும் நிலை­யுள்­ளது. 

ஆனால் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்­கான விடிவு குறித்து எது­வு­மே­யில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநி­யா­யங்கள் நிவர்த்தி செய்­யப்­பட வேண்­டிய கால­கட்டம் இது. இதனை முஸ்லிம் காங்­கி­ரஸே செய்ய வேண்­டுமே தவிர அமைச்சர் ரிஷாத்­தையோ அதா­வுல்­லா­வையோ கேட்க முடி­யாது. 

கட்­சியின் இரு செய­லா­ளர்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஊடகங்களுக்கு நானே கசியவிட்டதாக என் மீது குற்றச்சாட்டு கூறப்படுகின்றது. இது அபாண்டமான குற்றச்சாட்டாகும். இன்றுள்ள நிலையில் கட்சிக்குள் எனக்கு எத்தகைய சதிகள், இக்கட்டுகள் விளைவிக்கப்பட்டாலும் நீதிமன்றம் சென்று கட்சியை ஒருபோதும் சவாலுக்கு உட்படுத்தமாட்டேன். 

கட்சியிலிருந்து வெளியேற்றி னாலும் வேறுகட்சி எதிலும் நான் இணையப்போவது மில்லை. இறை நீதி ஒன்று கிடைக்கும் என்றார். 
இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக ஹஸனலியே தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானமும் எடுக்கப்பட்டது.

சலீம்- 
விடிவெள்ளி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -