வஸீம் தாஜுதீன் படு­கொலை தொடர்பில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவும்..!

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டையோர் அலரி மாளிகை, ஜனா­தி­பதி செய­லகம் போன்­ற­வற்றில் உள்­ளோ­ராக இருந்­தாலும் அவர்­களைக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு அழைத்து விசா­ரிக்­கவோ அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கவோ எவ்­வி­த­மான தடை­களும் இல்லை என கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று அறி­வித்தார்.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கார விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிசாந்த பீரிஸ் முன்­னி­லையில் இடம்­பெற்ற போதே நீதிவான் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் மனி­தப்­ப­டு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியை நோக்கி இதனைத் தெரி­வித்தார்.

ஏற்­கெ­னவே இவ்­வி­வ­கா­ரத்­துடன் இணைத்துப் பேசப்­படும் முன்னாள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர மேல்­நீ­தி­மன்றில் திருத்தல் மனு, உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு ஆகி­ய­வற்றைத் தாக்கல் செய்­தி­ருந்­தாலும் கைதுக்கு எதி­ரான இடைக்­கால தடை உத்­த­ர­வொன்று அந்த மன்­றங்கள் ஊடாக பிறப்­பிக்­கப்­ப­டாத நிலையில், குற்­ற­வியல் சட்டம் மற்றும் பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்­கை­களை எடுக்க புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு முடியும் எனவும் நீதிவான் சுட்­டிக்­காட்­டினார்.

பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி மிஸ்பாஹ் சத்­தாரின் முக்கிய வாதம் மற்றும் சந்­தேக நபர்­க­ளான அனுர சேன­நா­யக்க மற்றும் சுமித் சம்­பிக்க பெரேரா ஆகி­யோரின் சட்­டத்­த­ர­ணிகள் முன்­வைத்த கோரிக்­கை­களை ஆராய்ந்த போதே நீதிவான் மேற்­படி உத்­த­ரவைப் பிறப்­பித்தார்.

நேற்­றைய தினம் இந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது, அரசின் பிரதி சொலி­சிஸ்ரர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் விம­ல­சிரி ரவீந்ர மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இதன் போது மேல­திக விசா­ரணை அறிக்கை ஒன்று மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலையில் அதில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­வது,
வஸீம் படு­கொலை விவ­காரம் தொடர்பில் பல்­கோண விசா­ரணை இடம்­பெ­று­கின்­றது. பிரேத பரி­சோ­த­னையின் போது பின்­பற்ற வேண்­டிய முறை­மை­களை சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர பின்­பற்­றி­யுள்­ளாரா என்­பதை ஆராய சுகா­தார அமைச்சின் மேல­திக செய­லா­ள­ரிடம் நாம் வாக்கு மூலம் ஒன்­றினைப் பெற்­றுள்ளோம்.

அத்­துடன் வஸீமின் கொலை இடம்­பெற சில நிமி­டங்­க­ளுக்கு முன்னர் அவ­ரது நண்பர் ஒரு­வ­ருக்கு வந்த தொலை­பேசி அழைப்பு தொடர்­பி­லான விசா­ர­ணையில் இது­வரை 6 சாட்­சி­யா­ளர்­க­ளிடம் வாக்கு மூலம் பதிவு செய்து மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.

இத­னை­விட ஜனா­தி­பதி செய­லக தொலை­பேசி அழைப்பு விவ­காரம் தொடர்பில் கொலை இடம்­பெற்ற தினத்தில் ஜனா­தி­பதி செய­லக அழைப்புப் பிரிவில் கட­மை­யாற்­றிய இரு பொலிஸ் அதி­கா­ரி­க­ளான உப பொலிஸ் பரி­சோ­தகர் மது­ர­சிங்க ஆரச்­சிகே ஜயலத், கான்ஸ்­டபிள் நாலக ஆகி­யோ­ரிடம் நாம் விசா­ரணை நடத்­தி­யுள்ளோம். மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கி­றது. என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து வாதிட்ட சந்­தேக நபர்­களின் சட்­டத்­த­ர­ணிகள் தமது சேவை பெறு­நர்­க­ளான அனுர சேன­நா­யக்க, சுமித் சம்­பிக்க பெரேரா ஆகிய இரு­வரும் நீண்ட காலம் சிறையில் உள்ள நிலையில், இனப்­ப­டு­கொ­லை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஏன் இன்னும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என கேள்வி எழுப்­பினர்.

தமது சேவை பெறு­நர்கள் சதி செய்­த­தாக இருப்பின் அச்­ச­தி­யுடன் இணைந்து செயற்­பட்­ட­வர்கள் ஏன் கைது செய்­யப்­ப­ட­வில்லை என அவர்கள் கேள்வி எழுப்­பினர்.

ஜனா­தி­பதி செய­லகம், அலரி மாளி­கையின் தொலை­பேசி இலக்­கங்கள் தொடர்பில் வெளி­யா­கி­யுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வாக அவற்­றுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் ஏன் கைது செய்­யப்­ப­ட­வில்லை என அவர்கள் கேள்வி எழுப்­பினர்.

இந் நிலை­யி­லேயே பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவகாரத்துடன் தொடர்புடையோர் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்றவற்றில் உள்ளோராக இருந்தாலும் அவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து விசாரிக்கவோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ எவ்விதமான தடைகளும் இல்லை என கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் அறிவித்த நிலையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -