ரமழான் வருகிறது...!

ரமழான் வருகிறது
++++++++++++++

அஞ்சி வாழு என்பது
கஞ்சி வாளி என்றே
காதுகளில் விழும்

இருபதும் எட்டும்
இருபத்து எட்டு நாளுக்கு மேல்
இருப்புக்காய் போராடும்.

உண்ணாட்டுப் பிறை
உண்ணாதிருக்க
சர்வதேசம்
சர்பத் குடிக்கும்.

சர்வதேசம்
சஹர் செய்ய
உண்ணாடு
உறக்கத்தில் இருக்கும்.

ஒற்றை இரவில்
உள்ள பாவமெல்லாம்
போமற் பண்ணி
புண்ணியவனாக
ரெடியான கூட்டம்
விடிய விடிய முழிக்கும்.

அன்றொய்ட்களில்
அல்குர் ஆன் 
பதிவிறக்கி
பார்க்கப் படாமல் இருக்கும்

பேக் ஐடி முப்திகளின்
பேஷ்புக் பத்வாக்களால்
முகனூலுக்கு
மூச்சுத் திணறும்

வெள்ள நிவாரணத்தில்
விலகிய இயக்க வாதம்
மீண்டும் தலை தூக்கி
மெல்லப் படமெடுக்கும்

இத்தனையும் தாண்டி
இன்னுமொரு கூட்டம்
அல்லாஹ்வின் அன்புக்காய்
அழுது பிரார்த்திக்கும்.

-முஹம்மட் நிஸவ்ஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -