கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி...!

எப்.முபாரக்-
திருகோணமலை, தங்கபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய கஜேந்திரன் தர்ஷான் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவரக் கட்டப்படாத இந்தக் கிணற்றில் தவறி விழுந்த இந்தக் குழந்தையை தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

வீட்டுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (29) மாலை விளையாடிக்கொண்டிருந்த இந்தக் குழந்தையை காணவில்லை என்று தேடியதாகவும் இதன்போது, வீட்டு வளவில் அமைந்துள்ள இந்தக் கிணற்றைப் பார்வையிட்ட வேளையில் சிறுவன் கிணற்றில் விழுந்து காணப்பட்டதை அவதானித்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -