அரநாயக்கவும் : பியசேனையும்

அரநாயக்க சிறிபுர கிராமத்தில் வசித்து வந்த கே.டி.பியசேன ஒரு அதிர்ஷ்டலாபச் சீட்டு வியாபாரி. ஏழ்மைக் குடிலில் வாழ்ந்தாலும் பரந்த மனம் படைத்த பியசேனவுக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.

மூத்த மகன் அன்றாடம் வாங்கிக்கொடுக்கும் 100 அதிர்ஷ்டலாபச் சீட்டுகளை விற்பனை செய்து தன்னிறைவடைந்தார். மனதில் வலிகளைச் சுமந்து கண்ணீர் ததும்ப கதைக்கிறார் பியசேன-
“அன்று மூத்த மகனிடமிருந்து அழைப்பு வந்தது. அப்பா கடும் மழை பெய்கிறது. உடனடியாக வீட்டுக்கு வாருங்கள். பாதுகாப்பாக இருப்போம் என்று அழைத்தான் என் மகன்.

நான் சற்றுத் தாமதமாகவே சென்றேன். என் கிராமத்தை பார்க்கும்போது நான் வேறு தேசத்திலா இருக்கிறேன்? இது கனவா என்று யோசித்தேன். சிறிபுர மலை எங்கள் கிராமத்தையே அழித்திருந்தது.

என் மனைவியும் ஆசை மகன்மாரும் உயிரோடு இருக்க மாட்டார்களா என இறைவனை கெஞ்சிக் கெஞ்சி வேண்டிக்கொண்டிருக்கிறேன்” (மூலம்: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்) பியசேனவை போல எத்தனையோ பேர்...!

இயலாதவர்கள் பிரார்த்திப்போம் - இயலுமானவர்கள் எந்த வழியிலாவது உதவுவோம். இங்கே கிளிக் செய்தி ஒரு ரூபாய் எனும் உதவுங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -