திங்கட்கிழமை அரச விடுமுறை இல்லை – அரசாங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (23) அரச விடுமுறை தினம் அல்லவென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இம்முறை வழமையான வெசாக் விடுமுறை தினங்கள் இரண்டும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வந்துள்ளதனால், எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

இருப்பினும், நாட்டில் தற்பொழுது எற்படுள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்க, அரச ஊழியர்களின் பங்களிப்பு அவசியம் என்பதனால் விடுமுறை வழங்க முடியாதுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -