ஹாபிஸ் நஸீர் விவகாரம்: இரு தரப்பும் ஊடகங்களிடம் பேச வேண்டாம் - பிரதமர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தொடர்பில் அவரிடம் அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, கடற்படைப் பிரிவிடமிருந்தும் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் குறிப்பிட்ட இரு அறிக்கைகளையும் ஜனாதிபதியிடம் பிரதமர் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி வருகை தந்து, பின்னர் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கும் வரையில் ஊடகங்களிடம் எந்தவொரு தகவலையும் எந்தக் கருத்தையும் இரு தரப்பும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -